காதலித்தால் இதயங்கள்
இடம் மாறுமாமே வா
இதயங்களை மாற்றிவிட்டு
காதலித்து பார்ப்போம்
*
நான் வார்த்தை தேடி
அலைந்தபோது வந்து
கிடைத்த கவிதை நீ
*
பயந்து பயந்துதான் உன்னை
என் அம்மாவுக்கு அறிமுகப்
படுத்தினேன்
அவா
உன்னை ஆலாத்தி எடுத்து
வரவேற்பா என்று தெரியாமல்
*
வறண்ட பூமியை
விட நீ வைத்திருக்கும்
குடைதான் மழைக்காக
தவிக்கிறது
*
உலகம் அழியும் நாளில்
நான் உயிரோடிருந்தால்
தற்கொலையாளியாய்
உன் மேல் பாய்ந்துதான்
என்னை அளித்துக் கொள்வேன்
-யாழ்_அகத்தியன்
Friday, September 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment