Friday, September 7, 2007

இதயமானவளே...

காதலித்தால் இதயங்கள்
இடம் மாறுமாமே வா
இதயங்களை மாற்றிவிட்டு
காதலித்து பார்ப்போம்

*
நான் வார்த்தை தேடி
அலைந்தபோது வந்து
கிடைத்த கவிதை நீ

*
பயந்து பயந்துதான் உன்னை
என் அம்மாவுக்கு அறிமுகப்
படுத்தினேன்

அவா
உன்னை ஆலாத்தி எடுத்து
வரவேற்பா என்று தெரியாமல்

*
வறண்ட பூமியை
விட நீ வைத்திருக்கும்
குடைதான் மழைக்காக
தவிக்கிறது

*
உலகம் அழியும் நாளில்
நான் உயிரோடிருந்தால்
தற்கொலையாளியாய்

உன் மேல் பாய்ந்துதான்
என்னை அளித்துக் கொள்வேன்

-யாழ்_அகத்தியன்

No comments: