Thursday, September 6, 2007

யன்னல் நிலவு

மறக்க முடியாத உன்
முதல் முத்தம் வேண்டாம்
நான் இறக்க வேண்டும்
கடைசி முத்தம் கொடு

*
நீ தூங்குவதே இல்லையா
என் தூக்கங்களில் கனவாய்
வருகிறாயே

*
எல்லாரும் கவிதைக்குள்
கருத்தைதான் தேடுவார்கள்
நீ மட்டும் உன்னைத் தேடுவாய்

*
நீ வாங்கிக் கொடுத்த
செருப்போடுதான் இன்றும்
நடக்கிறேன் கைகளில்
சுமந்தபடி

*
என் கவிதைகளை எப்படி
படிக்க வருகிறாய் என்பதை
கற்றுக்கொடு

நீ குளிப்பதை எப்படி
எட்டிப் பார்ப்பது என்பதை
கற்றுக் கொள்கிறேன்

-யாழ்_அகத்தியன்

No comments: