Friday, September 7, 2007

காதலானவளே...

உன்னை எழுதுவதைவிட
உன்னை வாசிப்பதில்தான்
அதிக ஆர்வம் எனக்கு

*
உனக்காய் கவி எழுத
கற்பனைக் குதிரையை
தட்டிவிட்டேன் அது
உன்னைக் காட்டிக்
கொடுத்துவிட்டு
தூங்கிவிட்டது

*
என் கண்கள் காட்டிக் கொடுத்ததில்
துரோகமில்லாத ஒன்று என்றால்
அது உன்னைக் காட்டிக் கொடுத்தது
மட்டும்தான்

*
நீ
குளிக்கையில்
தண்ணீரோடு
நானும் குளிக்கிறேன்

*
உன்னைக் கவிதையாய்
வெளியிட விரும்பி
இன்றுவரை

உன் கண்களை பற்றித்தான்
எழுதிக் கொண்டிருக்கிறேன்


-யாழ்_அகத்தியன்

No comments: