Saturday, September 22, 2007

தரிசனமானவளே...

உன்
அமைதியான
வேண்டுதலால்

பொறுமையை
இழந்திருப்பாள்
பூமாதேவி

*
நீ
சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு
பிடித்தது

தேவதை தோசம்

*
நீ
முருகனைச்
சுற்றுகையில்

முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்

*
அழகானவள்
கிடைக்க வேண்டும்
என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும்

உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க
வேண்டும் என்கிறார்கள்

*
கடைசியில் எனக்கும்
சந்தேகம் வந்துவிட்டது

பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா?
கோயிலைச் சுற்றுகிறார்களா?

-யாழ்_அகத்தியன்

No comments: