உன்
அமைதியான
வேண்டுதலால்
பொறுமையை
இழந்திருப்பாள்
பூமாதேவி
*
நீ
சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு
பிடித்தது
தேவதை தோசம்
*
நீ
முருகனைச்
சுற்றுகையில்
முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்
*
அழகானவள்
கிடைக்க வேண்டும்
என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும்
உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க
வேண்டும் என்கிறார்கள்
*
கடைசியில் எனக்கும்
சந்தேகம் வந்துவிட்டது
பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா?
கோயிலைச் சுற்றுகிறார்களா?
-யாழ்_அகத்தியன்
Saturday, September 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment