Monday, September 3, 2007

கவியானவளே...[12]

உன் பார்வையில்
பார்த்துக் கொண்டேன்
என் கண் காட்சியை

*

உன்னை சுற்றியதில்
சேலைக்கு கிடைத்தது
அழகான தேவதை

*
தேடிப் பார்க்க தொடங்கினேன்
எனக்குள் இருக்கும் உன்னைக்
கொண்டு உனக்குள் இருக்கும்
என்னை

*
உன்னை பார்த்த களைப்பில்
ஓய்வெடுக்க விரும்புகிறது
கண்கள்
உழைக்க விரும்புகிறது
உதடுகள்

*
முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான் உன்
உதட்டில் ஒரு மச்சம்

-யாழ்_அகத்தியன்

No comments: