Friday, November 30, 2007

நிலையானவளே...!

என் சோம்பேறி மனசு
செய்த வீரமான செயல்

உன்னைக் கண்டதும்
ஓடிப்போய் உன்னைத்
தொட்டுவிட்டு திரும்பி
வராததுதான்

*
கையசைத்துவிட்டு
கல்லூரிக்குள் நுழைந்து
விடுகிறாய் நீ

விடை பெற்றுப்
போகும் கடைசி நாள்
மாணவன் போல்

வீடு செல்ல
மனமில்லாமல் நான்

*

நம் காதலுக்கு முதல்
எதிரி நேரம்தான்

பார்
நாம் சேர்ந்திருக்கும் போது
மட்டும்தான் போட்டி போட்டு
ஓடுகிறது

*

உன்னைக் காதலிக்க
வேண்டாம் என்பவர்களை
கூட்டி வா

ஒரு நிமிடம் நீ
இல்லாத என்னை
கொடுத்துப் பார்ப்போம்

சமாளிக்க முடிந்தால்
சமாதானம் பேசுவோம்

*

என் கைகளுக்கு இதுவும்
தேவை இன்னும் தேவை

என்னை எதுவும் கேக்காமலே
உன்னை அணைத்து பழகிவிட்டு

நீ தூரம் இருக்கிறாய் என்று
தெரியாமல் தேடிக் களைக்கிறது


-யாழ்_அகத்தியன்

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.