Monday, November 5, 2007

என் பாடல்......[02]

கொஞ்சிவிடு கொஞ்சிவிடு கொஞ்சவென
கெஞ்சவிடு நித்தமினி நித்தமினி நித்திரையை
கெடுத்திடு விடியட்டும் விடியட்டும் விளக்கை நீ
அணைத்திடு

மழைக்கும் நான் பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்ல
படிக்கிற வயதெல்லாம் கடந்திட்டு பிள்ளை
கனமழை பெய்யுது கட்டில் மெத்தை இருக்கிது
செய்முறை பலமுறை செய்திடவா நீ திருத்திட
திருத்திட தப்பு பண்ணவா வா வா வா

தூர தூர தூர தேசம் இன்னும் நான் நடந்ததேயில்ல
வழிவிடு வழிவிடு மெல்ல உன் தேகமெங்கும் தேகமெங்கும்
இதழ்களால் பொடி நட நடக்கிறேன் பாரு எந்தவழி
போனாலும் வழி காட்டியில்ல கை எடு கை எடு
கண்டு பிடிக்க

புள்ளி புள்ளி புள்ளிவைத்து கோலம் நான் போட்டதே இல்ல
கொஞ்சம்விடு கொஞ்சம்விடு புள்ளியின்றி நானும் உன் தேகமெங்கும் மீசையால் கோலம்தான் போடுறேன் பாரு பொறுத்திரு பொறுத்திரு கோழி மிதித்து கொஞ்சுதான் செத்ததில்ல மீசை குத்தி யாரும்தான் காயப்பட்டதில்ல

ஏய் ஏய் ஏய் மது மது போதையில் நானும் மயங்கியதில்ல
மண்ணோடு மண்ணாய் உன்னோடு நானும். தெளியவேயில்ல
தெளிந்திட மனசும்வரல இப்படியே தொடர்ந்திரு இதுவர
விட்டதில்ல இப்படி பெரு மூச்சு

மானே மயிலா மல்லிகைப்பூத் தேனே
என்ன சுகம் என்ன சுகம் ரொம்பத்தான்
இனிக்கிது கெஞ்சத்தான் வைக்கிது
மறுபடி கேக்கிது வா வா வா
வாரே வா வா வா வா செல்லம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


-யாழ்_அகத்தியன்

No comments: