Sunday, November 4, 2007

என் வாசகி நீ..!

முதல் முதலாக
நீ என்னை எழுத்துக்கூட்டி
வாசித்து முடித்தபோது

எல்லாக் கவிதைகளைப்
போலவும் நானும் உன்
வாழ்த்துக்காய் காத்திருக்க
முன்னமே

"என்றும் நீ எனக்குப்
பிடித்த கவிதையாக
இருந்துவிட முடியாது
ஏனெனில்
எழுத்துப் பிழைகள்
அதிகம் நிறைந்த
கிறுக்கலாய் இருக்கிறாய்"

என நீ கூறிவிட்டு
என்னை கசக்கி
எறிந்த இடம்

இன்றும் என்னை
கண்ணீரால் கவி
எழுத வைக்கிறது


-யாழ்_அகத்தியன்

No comments: