என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே
என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே
சொந்தமென யாருமில்ல
சொல்லிக் கொள்ள ஏதுமில்ல
என் சொர்கமே உன்னைவிட
ஏது வில(விலை)
பட்டப்படிப்பு படித்ததில்ல
பட்டதெல்லாம் அனுபவமே
பாவியாய் நினைத்தெனை
உன் நிழலாயெனும் கூட்டிபோ
என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே
தேடாத வார்தையென நானிருந்தேன்
தேடியே உனைத் தேர்ந்தெடுத்தேன்
நீயும் எனை விட்டு வைத்தால் எனை
யார் வாசிப்பார்
கலைந்து கிடக்கிறேன் எழுத்துகளாய்
என்னை கொஞ்சம் சேர்த்து வை உந்தன்
கவிதைக்கு வார்தையாகும் வரம் கொடு
என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே....
-யாழ்_அகத்தியன்
Friday, November 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment