Monday, November 19, 2007

மென்மையானவளே..!

என் இதயம்
மென்மையானது
அதனால்தான் நான்
எந்த தவறுசெய்தாலும்
என்னை கண்டிப்பதில்லை

அப்படிப்பட்ட என்
இதயத்தை கைப்பற்றி
என்னை எதுவுமே
செய்யாமல் பண்ணிவிட்டாய்

*
உன் விழிவீச்சு
படும்வரை அமாவாசை
இரவுக்குள் மறைந்து
கிடக்கின்றன
என் கவிதைகள்

*
நீ மட்டும்தான்
சிறந்த நீதிபதி நான்
எந்த தவறுசெய்தாலும்
கிள்ளுவதை மட்டுமே
தண்டனையாய் தருகிறாய்


*

உனக்கு எதை வாங்கி
வருவது என்ற குளப்பத்தில்

கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்

கண் திறந்து பார்க்கையில்
கையில் இருந்தது மட்டும்
சிரித்துக் கொண்டிருந்தது

கடையில் இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது

*
நீ வாசிக்க
ஆரம்பிக்கிறாய்
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
கரை சேர்கிறது

-யாழ்_அகத்தியன்

No comments: