Monday, November 26, 2007

என் பாடல்......[06]

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே

எனக்கென எனக்கென உன்னைப் படைக்க
அடி உனக்கு முன் உனக்கு முன் நான்
பிறந்தேனே உந்தன் விழிப் பார்வைக்குள்
நான் வாழ அடி எந்தன் உலகமே நீயென
வந்தாயோ

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

அடி உந்தன் வரவே இல்லையென்றால் அட
எந்தன் வாழ்வுக்கேது பகலே அடி நீயும்
என்னைக் கழித்திருந்தால் என்னை யாரு
யாரு சிலை செய்வார்

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

அடி எந்தன் கவிதை யார் தந்தது இதுவரை
யாருக்கும் சொன்னதில்லையே எல்லாமே
எல்லாமே நீ தந்தது உந்தன் பெயரே
உந்தன் பெயரே என் முதல் கவியானதிங்கே

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

இன்னும் இன்னும் நான் என்ன சொல்ல
உந்தன் பக்தன் நான் தானே வேறு என்ன
என்னைக் கொஞ்சம் என்னைக் கொஞ்சம்
நம்பிவிடு நா உனக்கென உனக்கென
வாழவிடு உந்தன் மடியே போதுமே
நான் தூங்க

அடியே என் சொர்கமே நீதானே
என் நிலவே என்னை மட்டும்
காதல் செய்துவிடு

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....


-யாழ்_அகத்தியன்

No comments: