உனக்கென்ன நீ தூங்கிவிட்டாய்
நான்தான் நீ தூங்கும் அழகை
கற்பனை பண்ணிப்பார்த்தே
என் இரவை நீளமாக்கிக்
கொண்டிருக்கிறேன்
*அப்படி என்னத்த உன்னில்
கண்டதோ என் இதயம்
உனக்கு பதிலாய் எதைக்
கொடுத்தாலும் என் மேல்
தூக்கி எறிகிறது
*
கவிதைகளை
நான் பெற்றதில்
பதிலுக்கு கவிதைகள்
செய்த நன்றிக்கடன்
உன்னை எனக்கு
தேடித்தந்ததுதான்
*
தூங்குவதற்கு இமை
மூட வேண்டும் என்பதையே
மறக்கடிக்கிறது உந்தன் நினைவு
*
என் வேதனை எல்லாமே
உன்னைக் காதலிக்க எனக்கு
ஒரு இதயம் போதாது
என்பதுதான்
-யாழ்_அகத்தியன்
Saturday, November 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment