Saturday, November 24, 2007

அருமையானவளே...!

நீ
என்னைத் தேடி
வருகிறாய்

நான்
நீயாக மாறி
என்னைத் தேடுகிறேன்

*

நடைபயிலும்
குழந்தையாய்
வருகிறாய்

தாயாய் என்
கவனம் எல்லாம்
உன் மேல்

*
நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்

என்பதை
ரசிப்பதற்காகவே

நான் தொலைந்து
போகலாம்

*
நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா

என்ற குளப்பத்தை
சாதுரியாமாய்
தீர்த்து வைத்தாய்

கைகூப்பி
வணக்கம் சொல்லி

*
உன்
தாவணிக்கு
எப்போது

என் தாயின்
கைவிரல்கள்
முளைத்தது

தடவியதும்
குழந்தையாய்
உறங்கி விட்டேனே


-யாழ்_அகத்தியன்

No comments: