இனிமையான
உன் குரலால்
என் இதயம்
மெழுகாய்
உருகுவதில்
மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்
பணிவான உன்
பாசத்தால் என்
தாயில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்
இதைவிட
சின்னச் சின்ன
குறும்புகளில்
செல்லச் ச
ண்டைகளில்
கொஞ்ச நேர
மெளனங்களில்
கூடித் திரியும்
பொழுதுகளில்
இடைவெளியில்லா
உன் நினைவுகளில்.....
இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ
இந்த உலகில் நானும்
அனாதையில்லை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்
-யாழ்_அகத்தியன்
Monday, November 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment