Tuesday, November 13, 2007

இதமானவளே..!

"நான்"
நீயாகவில்லை உன்
பக்தனாகத்தான் நான்

ஏனெனில்
உன் முதல் சந்திப்பிலேயே
"நான்" என்ற என் அகங்காரம்
என்னைவிட்டு பறந்து போய்விட்டது

*
காதலிக்கும்
இதயங்கள்தான்
என்றும் இளமையாக
இருக்குமாம் வா

நம் முதுமையில்
நமக்கென யாரும்
இல்லாமல் போனாலும்

நம் இதயங்களின்
குறும்புகளை சேர்ந்தே
ரசித்திடுவோம்

*
அழகாக பூத்திருக்கும்
பூச்செடிகளைக் கண்டு நீ
ஆனந்தப்பட்டபோதுதான்

முதன் முதலாக நான்
கண்காணிக்காததால்

வாடிப்போன
பூச்செடிகளுக்காய்
கவலைப்பட்டேன்

*
உனக்காவே
பிறந்த நான்
இறைவனிடம்
வரம் கேட்டால்

நீ சூடும்
பூக்களைப்போல்

உன்னோடு வாழ்ந்து
உன்னில் இறந்துபோக
வேண்டுமெனக் கேட்பேன்

*
என் கவிதைகளை நீ
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்

நான் மனம் வைத்துத்தான்
ஒவ்வொரு கவிதையையும்
எழுதுகிறேன் என்ற உண்மையை


-யாழ்_அகத்தியன்

1 comment:

மே. இசக்கிமுத்து said...

கவிதைகள் மிகவும் அருமை! அசத்துங்கள் நண்பரே!!