Saturday, November 3, 2007

உறவானவளே..!

நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்

*
கரப்பான்பூச்சியை
கண்டதும் நீ என்னைக்
கட்டிப் பிடித்தாய்

நான் கரப்பான்பூச்சிக்கும்
நன்றிக் கடனாளியாகிவிட்டேன்

*
வகுப்பாசிரியைக்கு உன்
மேல் பொறாமை படிப்பிக்கும்
தன்னைக் கவனிக்காமல் நான்
படிக்கும் உன்னைக் கவனிப்பதால்

*
பேசாமல்
எனக்கு நீ முத்தமிடு
இல்லையேல் ஏதாவது
பேசிவிடு

உன் இதழ்கள்
ஒன்றை ஒன்று
முத்தமிடுவதையாவது
நான் பார்த்துவிட்டுப் போகிறேன்

*
எல்லாரும் அழகுக்காக
பொட்டு வைப்பார்கள்

நீ மட்டும்தான் உன்
அழகில் யாரும்
கண்படக்கூடாது
என்பதற்காக
பொட்டு வைக்கிறாய்


-யாழ்_அகத்தியன்

No comments: