Friday, November 23, 2007

இம்சையானவளே...!

உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள் உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே

*
அந்த சூரியனுக்கு
யார் என்னைக்
காட்டிக்கொடுத்தது

பாருங்கள்
நிலாவுக்காக
காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில்
என்னை கறுப்பாக்கி
கொண்டிருக்கிறது

*

உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
நி
ன்
று
பார்
உன்னைப் பெற
என்னை நான்
இழந்த வலி புரியும்

*
தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்

*
" நிலா" என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்


-யாழ்_அகத்தியன்

No comments: