வா நிலா வா நிலா வசந்தம் தா நிலா
நீ நிலா நினைவுகள் தா நிலா பார் நிலா
உன் பார்வையின்றி தேய்வது நான் நிலா
உனைத் தேடியே என்
கண்கள் பூத்ததோ தேன் நிலா
எனைத் தேடமலே நீயும் மறைவதேன்
பால் நிலா
எங்கே நீ சென்றாலும் என் நிலா
நீ நிலா நீயில்லா என் வானம்
அது விதவையின் நெற்றி நிலா
நீயில்லா நான் யாருமில்லா
குழந்தை நிலா
இமைத்திடும் கண்களில் தெரிவது நீ நிலா
துடிக்கும் இதயத்தில் வசிப்பது நீ நிலா
எழுதிடும் கவிதையில் மொழியும் நீ நிலா
நிலா நிலா நீயே என் சொந்த நிலா
காதலை இருவரும் சொன்ன நாள்
இன்றல்லவோ வா நிலா
வாழ்வோம் ஒன்றாய் வானம்
உள்ளவரை சேர்ந்தே.....
-யாழ்_அகத்தியன்
Saturday, November 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment