Saturday, December 29, 2007

உண்மையானவளே..!

கோவமான
உன் முகத்தை
பார்பதற்காகவே

என் ஆசைகள்
உனக்கு பிடிக்காத
செயல்களை தெரிந்து
வைத்திருக்கிறது

*
வாய்காரன் நான்
என்பதை தெரிந்தா

என்னில் உனக்கு
அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்

அன்றில் இருந்து நான்
யாரிடமும் வாய்
காட்டுவதே இல்லை

*
உன்னை சந்திக்க
கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்

கவனமாய் உன்னை
தேடிக் கொண்டிருக்கும்
என் மனசு

*
எல்லா
எழுத்துக்களையும்
வைத்து
கவிதை எழுதினாலும்

இன்னும் என்னால்
உனக்கு
பெயர்வைத்ததால்
கவிஞனான உன்
தந்தைபோல்

இரண்டு எழுத்தில்
அழகான கவிதை
எழுத முடியவில்லை

*
நாடு கிடைக்க
போராடுபவன்
போராளி என்றால்

நீ கிடைக்க
போரடும் நான்
காதலாளிதான்

*

என்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் நான்
எழுதாத கவிதை நீ


-யாழ்_அகத்தியன்

1 comment:

மே. இசக்கிமுத்து said...

எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!