Saturday, December 8, 2007

எனக்கானவளே...!

எல்லாருக்கும்
பிடிச்ச
கவிஞனாக நான்

எனக்குப்
பிடிச்ச
கவிதையாக நீ

*

எனை வாசிக்கத்
தொடங்குகிறாய்

என் பிழைகளை
நீக்கத் தொடங்குகிறது
காதல்

*

நிலாவாகிறாய் நீ
வானமாகிறது காதல்

வானமாகிறாய் நீ
தேய்பிறையாகிறேன் நான்

*

நிலாவாய் வந்து
மறைகிறாய்

எனை காயவைக்க
உதிக்கிறது சூரியன்

*

தேயத் தேயஎ
ன்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் கவி நிலா நீ


-யாழ்_அகத்தியன்

No comments: