Wednesday, December 5, 2007

காதலானவனே..!

நீ எழுதும்
கவிதை அழகுதான்
அதற்காக

யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே

*

நீ
இல்லாத
தருணங்களில்
வாடிப்போகும்
எனக்காக

நீ கொடுத்த
பூச்செடிதான்
என்னை மலரவைத்துக்
கொண்டிருக்கிறது

*

எதுவும் கேக்காமலே
என் மடியில் நீ
உறங்கியபோதுதான்

தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்

அதற்காக
உன் குழந்தைதனத்தை
கையிலுமா வைத்திருப்பாய்

என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்

*

எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்

உன்னை
ஞாபகப்படித்தி
விடுகிறது

முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்

*

நீ பிரியும்போது
கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்

உன் வலதுகையை
கொடுத்துவிட்டு
போயிருக்கலாம்

என்னை பிரியவிடாது
அணைத்துக் கொண்டிருந்திருக்கும்



-யாழ்_அகத்தியன்

No comments: