தாயைத் தவறவிட்ட
குழந்தையின் கண்ணீரை
துடைத்துவிட்ட உன்
கைவிரலில் தவறவிட்டேன்
என்னை நான் உன்னிடம்
*
நீ நீயாக இருக்கும்
உன் பிடிவாதக்காகவே
நான் நானாக இல்லாமல்
நீயாக மாறலாம்
*
உன் இமைகள்
சேரும் அழகிலே
இரவாகலாம் நான்
விடியாமல் போனாலும்
பரவாயில்லை
*
உன்னை மறந்து
என்னால்
உறங்க முடியவில்லை
உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு
கனவில் நன்றி
சொல்வேன்
*
நீ என் கவிதைகளுக்கு
வாசகியாக இருந்ததற்கு
பதிலாய்
நீயும் கவிதை
எழுதியிருக்கலாம்
நீயாக மாறியதில்
இருந்து வாசிப்பதை
மட்டுமே
விரும்புகிறேன் நான்
-யாழ்_அகத்தியன்
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment