Thursday, December 20, 2007

புதுமையானவளே..!

தாயைத் தவறவிட்ட
குழந்தையின் கண்ணீரை
துடைத்துவிட்ட உன்
கைவிரலில் தவறவிட்டேன்
என்னை நான் உன்னிடம்

*
நீ நீயாக இருக்கும்
உன் பிடிவாதக்காகவே
நான் நானாக இல்லாமல்
நீயாக மாறலாம்

*
உன் இமைகள்
சேரும் அழகிலே
இரவாகலாம் நான்
விடியாமல் போனாலும்
பரவாயில்லை

*
உன்னை மறந்து
என்னால்
உறங்க முடியவில்லை

உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு

கனவில் நன்றி
சொல்வேன்

*
நீ என் கவிதைகளுக்கு
வாசகியாக இருந்ததற்கு
பதிலாய்

நீயும் கவிதை
எழுதியிருக்கலாம்

நீயாக மாறியதில்
இருந்து வாசிப்பதை
மட்டுமே
விரும்புகிறேன் நான்


-யாழ்_அகத்தியன்

No comments: