Monday, December 10, 2007

நீ வாழ நான் பாடுவேன்...!

நீ ஒட்டிவிட்டு
எறிந்த பொட்டு நான்

யார் யாரோ
கால்களால்
மிதிக்கப் படுகிறேன்

*

என்னை நீ ஊதிவிட்டு
உதைக்கும்போதுதான்
தெரிந்துகொண்டேன்

எனை வீரனாய்
நினைக்காமல்

நீவிளையாட்டு
பந்தாய்த்தான்
நினைத்தாய் என்று

*

ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது

கவிஞனாக்கினாய்
என்ற கோவத்தில்

உனக்காக நானெழுதிய
எந்தக் கவிதையிலும்
ஆயுத எழுத்து
இல்லாமல் இருப்பது

*

அன்று
உனக்கும் சேர்த்து சுவாசித்தேன்
இன்று
உன்னவருக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன்

*

நீ வாழ்ந்தவீடு _ நான்
என்னை விட்டுவிட்டு
புகுந்தவீடு சென்றுவிட்டாய்

இனி நீ திரும்பிவர
நினைத்தால் தயவு செய்து
தனியாக வந்துவிடாதே

நீ இல்லாமல் சாய்ந்து கிடக்கும் நான்
உடைந்து விழுந்துவிடுவேன்


-யாழ் அகத்தியன்

No comments: