நீ ஒட்டிவிட்டு
எறிந்த பொட்டு நான்
யார் யாரோ
கால்களால்
மிதிக்கப் படுகிறேன்
*
என்னை நீ ஊதிவிட்டு
உதைக்கும்போதுதான்
தெரிந்துகொண்டேன்
எனை வீரனாய்
நினைக்காமல்
நீவிளையாட்டு
பந்தாய்த்தான்
நினைத்தாய் என்று
*
ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது
கவிஞனாக்கினாய்
என்ற கோவத்தில்
உனக்காக நானெழுதிய
எந்தக் கவிதையிலும்
ஆயுத எழுத்து
இல்லாமல் இருப்பது
*
அன்று
உனக்கும் சேர்த்து சுவாசித்தேன்
இன்று
உன்னவருக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன்
*
நீ வாழ்ந்தவீடு _ நான்
என்னை விட்டுவிட்டு
புகுந்தவீடு சென்றுவிட்டாய்
இனி நீ திரும்பிவர
நினைத்தால் தயவு செய்து
தனியாக வந்துவிடாதே
நீ இல்லாமல் சாய்ந்து கிடக்கும் நான்
உடைந்து விழுந்துவிடுவேன்
-யாழ் அகத்தியன்
Monday, December 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment