கோவமான
உன் முகத்தை
பார்பதற்காகவே
என் ஆசைகள்
உனக்கு பிடிக்காத
செயல்களை தெரிந்து
வைத்திருக்கிறது
*
வாய்காரன் நான்
என்பதை தெரிந்தா
என்னில் உனக்கு
அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்
அன்றில் இருந்து நான்
யாரிடமும் வாய்
காட்டுவதே இல்லை
*
உன்னை சந்திக்க
கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்
கவனமாய் உன்னை
தேடிக் கொண்டிருக்கும்
என் மனசு
*
எல்லா
எழுத்துக்களையும்
வைத்து
கவிதை எழுதினாலும்
இன்னும் என்னால்
உனக்கு
பெயர்வைத்ததால்
கவிஞனான உன்
தந்தைபோல்
இரண்டு எழுத்தில்
அழகான கவிதை
எழுத முடியவில்லை
*
நாடு கிடைக்க
போராடுபவன்
போராளி என்றால்
நீ கிடைக்க
போரடும் நான்
காதலாளிதான்
*
என்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் நான்
எழுதாத கவிதை நீ
-யாழ்_அகத்தியன்
Saturday, December 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
Post a Comment