Friday, December 7, 2007

எனதானவளே...!

உன்னை நான்
ஆசைப்படுவதை
யாரிடமும்
சொல்லிவிடாதே

நான் கதைக்காமல்
விட்டவர்கள் எல்லாரும்
என் மேல்
கோவித்துவிடுவார்கள்

*

உன் மேலான என்
ஆசையெல்லாம்
ஒன்று சேர்ந்து

என் ஆசையில் ஒன்றான
என் கோவத்தை உன்னிடம்
காட்டவேண்டும் என்பதை
நிராசையாக்கிவிட்டது

*

விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோவிக்க
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்

*

உன் வீட்டில் நீ
வாயாடியாம்

பொய்சொல்கிறார்கள்

இதுவரை
உன் முத்தம்
வலித்ததில்லையே

*

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது

உன் மேல் கோவிக்கும்
போதுதான் என் ஆசைகள்
எல்லாம் எழுந்து நிற்கின்றன


-யாழ்_அகத்தியன்

No comments: