Monday, December 10, 2007

யாரும் எனக்கில்லை...!

உன்னோடு பேசி
சிரித்த நாட்கள்

உன் கைபிடித்து
திரிந்த நாட்கள்

ஏன்
உன் மடியில் எனை
மறந்து தூங்கிய
நேரங்கள்

இப்படியான என்
சந்தோசங்களை
எல்லாம்

காரமான சில வினாடி
பேச்சால் கரைத்துவிட்டாயே

பாவம் நான்
யாருமே எனக்கில்லை என்ற
உண்மையை எத்தனை பேரிடம்தான்
ஏமாந்து தெரிந்து கொள்வேன்.



-யாழ்_அகத்தியன்

1 comment:

மாறன் said...

hey man ,

you are not alone...with words and love..don't feel like that