Thursday, December 6, 2007

உலகமானவளே...!

உன்னை நாளையும் சந்திக்கலாம்
என்ற சந்தோசத்தைவிட இன்றும்
உன்னைப் பிரிவதே கொடிது

*

நம் முதல் சந்திப்பை
பற்றி யாரிடமாவது பேச
நினைக்கும் போதெல்லாம்
வாயடைத்துவிடுகிறது நம்
முதல் பிரிவு

*

ராஜ்மஹாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்

யாருமே காத்திராத
உன் வீடுதான்

என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய் தெரிகிறது

*

எப்பதான் எனை
உன் வீட்டுக்கு
கூட்டிச் செல்லப்
போகிறாய்

நான்
முதல் முதலாய்
வாங்கிக் கொடுத்த
பொம்மை
கிழவியான பிறகா..?

*

உன்னைப் பார்த்தால்
யாருக்கும் அலுக்காதுதான்

அதற்காக உன்னை உன்
வீட்டிலே வைத்திருந்தா

என் கண்கள் சும்மாவிடுமா..?


-யாழ்_அகத்தியன்

No comments: