உன்னை நாளையும் சந்திக்கலாம்
என்ற சந்தோசத்தைவிட இன்றும்
உன்னைப் பிரிவதே கொடிது
*
நம் முதல் சந்திப்பை
பற்றி யாரிடமாவது பேச
நினைக்கும் போதெல்லாம்
வாயடைத்துவிடுகிறது நம்
முதல் பிரிவு
*
ராஜ்மஹாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்
யாருமே காத்திராத
உன் வீடுதான்
என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய் தெரிகிறது
*
எப்பதான் எனை
உன் வீட்டுக்கு
கூட்டிச் செல்லப்
போகிறாய்
நான்
முதல் முதலாய்
வாங்கிக் கொடுத்த
பொம்மை
கிழவியான பிறகா..?
*
உன்னைப் பார்த்தால்
யாருக்கும் அலுக்காதுதான்
அதற்காக உன்னை உன்
வீட்டிலே வைத்திருந்தா
என் கண்கள் சும்மாவிடுமா..?
-யாழ்_அகத்தியன்
Thursday, December 6, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment