தன்னை விதைத்து
காதலை
எதிர்பார்த்தவர்கள்
பட்டுப்போனார்கள்
காதலை விதைத்து
உன்னை எதிர்பார்த்த
நீ மட்டும்
என் மனசெங்கும்
படர்ந்திருக்கிறாய்
*
நீ என்னை மட்டும்
உன்
வசப்படுத்தவில்லை
என் கவி
வாசகர்களையும்தான்
பார்
கவி எழுதிய என்னை
விசாரிக்காமல் எல்லாரும்
யாருக்காக எழுதியது என்று
உன்னை விசாரிப்பதை
*
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு
*
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
*
என்றும் உன் அருகே
நடந்து வரப்போகும்
கணவனாகும் வரம்
கிடைக்காமல் போனாலும்
உன் கால்தடங்கள் தேடியே
ஓடிவரப்போகும் உன்
குழந்தையாகும் வரம்கொடு
அது போதும் எனக்கு
என் காதல் தாயும் நீயே
என்ற அன்புக்கு
-யாழ்_அகத்தியன்
Friday, January 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
அழகான சொற் சேர்ப்பு ஏன் உங்கள் காதல் மட்டும் பிழையாய் போனது
சொற்களுக்கு உயிர் கொடுக்கிறீர்கள்
உண்மையில் உயிர் உள்ள கவிதை இது ….உங்கள் காதல் உயிர் பெறட்டும்
நன்றாக இருக்கிறது
அருமையான காதல் கவிதை!! காதல் வாழ்க!!
Post a Comment