Sunday, March 16, 2008

மனமானவளே..!

உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்

*
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு

*
காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்

அத் தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்

*
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது

எனக்கான கவிதை நீ
என்பதின் பெருமை
எனக்குரியது

*
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ

நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும்
விழியாய் நான்


-யாழ்_அகத்தியன்

No comments: