உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்
*
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு
*
காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்
அத் தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்
*
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது
எனக்கான கவிதை நீ
என்பதின் பெருமை
எனக்குரியது
*
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ
நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும்
விழியாய் நான்
-யாழ்_அகத்தியன்
Sunday, March 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment