Saturday, January 5, 2008

பொங்கலோடு நீ..!

உன் பொங்கல் கவிதை
தித்திப்பதற்காகவே
சேர்த்தாயா உன்
சக்கைரைப் பெயரை
இப்படி இனிக்கிறதே

*
தினம் நீ
முறித்து தரும்
கரும்பின் சுவை
அலுத்துவிட்டது

எங்கே
கரும்பொன்றை
கடித்துவிட்டு தா

உன் இதழ் தொட்ட
சுவை அறிய வேண்டும் நான்

*
நீ கண் மூடி வழிபட வழிபட
தன் நெற்றிக் கண்ணையும்
திறந்து பிரகாசிக்கிறான்
சூரியபகவான்

*
சூரியபகவானுக்காய் நீ
போடும் நட்சத்திரக்
கோலத்தோடு உன்னை
பார்க்கும்போது
நிலாக்கோலம்தான்
ஞாபகம் வந்தது எனக்கு

*
எல்லாரும் கண்மூடி
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
நீ பாடிய தேவாரத்தை

நான் மட்டும் கண்திறந்து
கவனித்துக் கொண்டிருந்தேன்
எப்போ பிரியும் உன் இமைகள்
என்று


-யாழ்_அகத்தியன்

No comments: