Tuesday, January 8, 2008

மன்னவனே..!

காதலனே
எனக்கு எதுவும்
வாங்கிவராதே

முடிந்தால் உன்னை
யார் கண்ணும் படாமால்
கூட்டிவா

அதுவே போதும்
நான் கவலையின்றி
கண் உறங்க

*
உனக்காக பிறந்தவள் நான்
என்றதில் குழந்தையாய் நான்
மகிழ்ந்ததை விட

உன் கவிதையின் கரு நான்
என்பதிலேயே தாயாய் நான்
அதிகமாய் மகிழ்ந்தேன்

*
பாவம் என் கன்னங்கள்
நீ ஆசையாய் கொடுக்கும்

ஒவ்வொரு முத்தத்தையும்
பொத்தி வைத்திருக்க
தெரியாமல்

தடவி பறிக்கும் என்
கைவிரல்களிடம் கொடுத்து
ஏமாந்துவிடுகிறது

*
இப்படி என் வீட்டவர
பயப்பிடுவாய் என்று
தெரிந்திருந்தால்

உன் புகைபடத்தை என்
அறையெங்கும் ஒட்டிவைத்து
என் கோழைத்தனத்தை
வெளியே
அனுப்பியிருக்க மாட்டேன்

*
வெக்கம் கேட்ட
கவிஞன் நீ

என் வெக்கங்களை
கவிதையாக்கியே

என்னை வெக்கப்பட
மட்டும்
வைத்துவிட்டாய்


-யாழ்_அகத்தியன்

1 comment:

மே. இசக்கிமுத்து said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை!! வாழ்த்துக்கள்!!