காதலனே
எனக்கு எதுவும்
வாங்கிவராதே
முடிந்தால் உன்னை
யார் கண்ணும் படாமால்
கூட்டிவா
அதுவே போதும்
நான் கவலையின்றி
கண் உறங்க
*
உனக்காக பிறந்தவள் நான்
என்றதில் குழந்தையாய் நான்
மகிழ்ந்ததை விட
உன் கவிதையின் கரு நான்
என்பதிலேயே தாயாய் நான்
அதிகமாய் மகிழ்ந்தேன்
*
பாவம் என் கன்னங்கள்
நீ ஆசையாய் கொடுக்கும்
ஒவ்வொரு முத்தத்தையும்
பொத்தி வைத்திருக்க
தெரியாமல்
தடவி பறிக்கும் என்
கைவிரல்களிடம் கொடுத்து
ஏமாந்துவிடுகிறது
*
இப்படி என் வீட்டவர
பயப்பிடுவாய் என்று
தெரிந்திருந்தால்
உன் புகைபடத்தை என்
அறையெங்கும் ஒட்டிவைத்து
என் கோழைத்தனத்தை
வெளியே
அனுப்பியிருக்க மாட்டேன்
*
வெக்கம் கேட்ட
கவிஞன் நீ
என் வெக்கங்களை
கவிதையாக்கியே
என்னை வெக்கப்பட
மட்டும்
வைத்துவிட்டாய்
-யாழ்_அகத்தியன்
Tuesday, January 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை!! வாழ்த்துக்கள்!!
Post a Comment