Saturday, January 5, 2008

உனக்கே உயிரானேன்...!

என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்

உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்

கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்

*
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது

உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர

*
உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்

ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது

*
யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக

*

என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்

உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை


-யாழ்_அகத்தியன்

No comments: