ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்
உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்
*
அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா
பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்
நீ தூக்கவே
முடியாதளவுக்கு
*
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்
தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு
*
ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்
நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்போது
*
எல்லாம் சேலைதான்
எனினும்
நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது
*
என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட
நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்
-யாழ்_அகத்தியன்
Monday, March 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமானால் சொல்லிக் கொண்டே போகலாம் உங்கள் கவிதையை போல!!
என்ன ஆளயே கானோம்!!
எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!
அழகான, கவிதை..
நேசமுடன்
நித்தியா
எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
அன்போடு,
இசக்கிமுத்து..
Post a Comment