Sunday, March 16, 2008

இலக்கியமானவளே...!

எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை

*
என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை

*
அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது

*
என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள் என்றாலும்

அவளால் வாசிக்கப்படும்
கவிஞன் நான்

*
எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்


-யாழ்_அகத்தியன்

No comments: