Wednesday, July 4, 2007

கவியானவளே...[08]

கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள்
உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும்

*
உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில்
யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள்
காதலியை கண்டுபிடித்தவர்கள்

*
என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான்
ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது
இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா...?

*
என்னைப்போல் யாரும் உன் அமைதியை
விரும்ப மாட்டார்கள் உன் கீழ் உதடாய்
நீ மாறும்போதும் உன் மேல் உதடாய்
நான் மாறும் வரையிலும்

*
இன்றுவரை காதலோடு வரும் எந்த
பெண்களுடனும் நான் உரையாடியதில்லை
காரணம் எனக்கே தெரியாத உனக்கு துரோகம்
செய்யக் கூடாது என்பதால்

*
முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன்
நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை
என்னை பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்

*
ஒரு வார்த்தை கூட பேசாத உன்னோடு
தினமும் பேசிய களைப்பில்தான் விடிகிறது
என் ஒவ்வொரு தூக்கமும்

-யாழ்_அகத்தியன்

No comments: