Sunday, July 8, 2007

கவியானவளே...[09]

நான் உன்னை நினைப்பதை
மறந்துவிடப் போவதில்லை
அது என்னை மறக்கப் பார்க்கிறது

*
என் எதிரியல்லக் காதல் அனாலும்
சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால்
சாகக்கூடாது என்பதால்

*
நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய்
என் காதல் முட்டையை உடைத்துவிடாதே
நானாக உடைத்து வெளிவரும் வரை

*
அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
மறந்து தொலைத்த பாதையில்_ நான்
என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன்
அவளை நினைத்து வாழ

*
என்னை மறப்பதற்காய் நான்
இறந்து விட்டதாக நினைத்து
விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து
கொண்டிருப்பது யுத்த பூமியில்



-யாழ்_அகத்தியன்

No comments: