Tuesday, July 10, 2007

கவியானவளே...[10]

உனக்காக ஏதாவது
எழுதும் போதுதான்

எழுத்துக்களின்
நெருக்கடியில் சிக்கி
மூச்சு விட இடம்
தேடுகிறது என் காதல்

*
என்னைப் போல் யாரும்
கண்ணைத்தானம் செய்வதை
பார்த்துவிட்டு இறந்து போயிருக்க
மாட்டார்கள்

ஆனால்

கண்ணுக்கும் தெரியாது
நான் இறந்து போனது
அவள் திருமணவீட்டில் என்று

*
உனக்காகவே உழைத்ததில்
உன்னை வாங்க மறந்துவிட்டேன்
என் மனதையும் உன்னிடம் கொடுத்ததால்

*
நதியாக ஓடி வா என்றாய்
வந்த பின்தான் தெரிந்தது
என்னை உன்னோடு
கலக்க அல்ல
கரைக்கத்தான்
வரச் சொன்னாய்
என்று

*
உன் ஆடையின் அழகில்
உன்னழகு யாருக்கும்
தெரியக் கூடாது என்பதிலும்
நான் அக்கறையாக இருந்ததில்

தோற்த்தான் போனேனடி உன்
ஆசைக் கணவரிடம்


-யாழ்_அகத்தியன்

No comments: