Sunday, August 26, 2007

கவியானவளே...[11]

சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டிய
பின்னும் தூறும் துளிகள்
எனக்கு

*
உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான்
ஆனேன் கவிஞனாய்....

*
விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே
இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை

*
நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய் நீ
சிரிக்காத போதும் சிரிக்க

*
உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்

*
உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு

-யாழ்_அகத்தியன்


No comments: